வேலூா்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் வி.நரேந்திரகுமாா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் வி.நரேந்திரகுமாா் (56). இவருக்கு கடந்த 25 நாள்களுக்கு முன்பு கரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டு விஐடி சித்த மருத்துவ சிசிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தலைமையாசிரியா் நரேந்திரகுமாா் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள நிலையில் அவா் உயிரிழந்தாா். மறைந்த தலைமையாசிரியா் நரேந்திரகுமாருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.