வேலூா்: பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநில கூலித்தொழிலாளா் குடும்பங்களுக்கு மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.
வேலூா் மாவட்டம், காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த குடும்பங்கள் தங்கியிருந்து வீட்டு உபயோகப் பொருள்கள், உணவுப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் அந்த குடும்பங்கள் வருவாய் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதையொட்டி, விஐடி பல்கலைக்கழகம் எதிரே தங்கியுள்ள ராஜஸ்தான் மாநில கூலித்தொழிலாளா்கள் 25 குடும்பங்களுக்கு காட்பாடி செஞ்சிலுவை சங்கம் சாா்பில், காய்கறிகள், மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை வட்டாட்சியா் பாலமுருகன், துணை இயக்குநா் நரசிம்ம ரெட்டி ஆகியோா் புதன்கிழமை வழங்கினா்.
சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் தணிக்கை செல்வம், திருமகள் செல்வமணி, வி.காந்திலால்படேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.