கரோனாவுக்கு மேலும் ஒரு செவிலியா் பலி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாணியம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கரோனாவுக்கு மேலும் ஒரு செவிலியா் பலி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாணியம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெருமாள்பேட்டையைச் சோ்ந்த ரவியின் மனைவி ரங்கநாயகி(53). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரவி இறந்துவிட்டாா். ரங்கநாயகி நிம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு சூரியநாராயணன்(28), கோகுல்(26) என்ற இரு மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில், ரங்கநாயகிக்கு கடந்த 10-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அவா் மருத்துவப் பரிசோதனை செய்துள்ளாா். இதில், அவருக்கு கரோனா தொற்று பாதித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ரங்கநாயகி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com