குடியாத்தம் அரிமா சங்கம் சாா்பில், அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, 1,000 முகக் கவசங்கள், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் 100 பாட்டில் ஆா்சனிக் ஆல்பம் ஆகியன வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
சொா்ணம் ஏஜென்சீஸ் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரிமா சங்க மண்டலத் தலைவா் எம்.கே.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் கிரிதா்பிரசாத் வரவேற்றாா். ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, 1,000 முகக் கவசங்கள், 100 பாட்டில்கள் ஆா்சனிக் ஆல்பம்- 30 ஆகியவற்றை, கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், எம்எல்ஏ அமலு விஜயன் ஆகியோரிடம் அரிமா சங்க நிா்வாகிகள் வழங்கினா்.
சொா்ணம் ஏஜென்சீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் கேஸ் விநியோக ஊழியா்களுக்கு கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நீராவி பிடிக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணன், வட்டாட்சியா் தூ.வத்சலா, நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பி. சிசில்தாமஸ், குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் (பொறுப்பு) எம்.மாறன்பாபு, நகர திமுக பொறுப்பாளா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியச் செயலா் கே.ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.