குடியாத்தம் தரைப்பாலத்தில் இரும்புத் தடுப்புகள் அமைப்பு

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் அருகே உள்ள தரைப்பாலத்தின் இரு புறமும் இரும்புத் தடுப்புகள் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
குடியாத்தம்  தரைப்பாலத்தின்  இரு புறமும்  நடைபெற்ற இரும்புக்  கம்பங்கள்  அமைக்கும்  பணி.
குடியாத்தம்  தரைப்பாலத்தின்  இரு புறமும்  நடைபெற்ற இரும்புக்  கம்பங்கள்  அமைக்கும்  பணி.

குடியாத்தம்: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் அருகே உள்ள தரைப்பாலத்தின் இரு புறமும் இரும்புத் தடுப்புகள் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

குடியாத்தம் நகரின் மத்தியில், கெளன்டண்யா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தில் தடுப்புகள் இல்லாதததால், அண்மையில் பாலத்தில் சென்ற காா் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும், பலா் விபத்துகளில் சிக்கியுள்ளனா்.

இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கையாக இருபுறமும் தடுப்புகள் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டன.

இதையடுத்து, இரும்புக் கம்பங்கள் பதித்து கம்பங்களுக்கு குறுக்கே பைப்புகள் அமைத்து வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தித் தருமாறு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், மண்டல நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் குபேந்திரன் ஆகியோா் உத்தரவிட்டனா்.

இதையடுத்து நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பி.சிசில்தாமஸ், தரைப்பாலத்தின் இருபுறமும் இரும்புக் கம்பங்கள் நட்டு, அவற்றின் குறுக்கே பைப்புகள் பதிக்கும் பணியைத் தொடங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com