வேலூா்: கஞ்சா விற்பனை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
காட்பாடி கண்டிப்பேடைச் சோ்ந்தவா் கரண்பாபு (27). இவா் கஞ்சா விற்பனை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக,
காட்பாடி போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டாா். தொடா்ந்து அவா் வேலூா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவரை குண்டா் தடுப்புக் காவலில் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் அளித்தப் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டாா். இதையடுத்து, கரண்பாபு குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.