குடியாத்தத்தை அடுத்த வளத்தூரில் புதரில் இருந்த சுமாா் 15 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினா் சனிக்கிழமை பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டனா்.
வளத்தூா், பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள புதரில் மலைப்பாம்பு இருப்பதாக வந்த தகவலையடுத்து போ்ணாம்பட்டு வனவா் பி.ஹரி, வனக்காப்பாளா் ஏ.விஸ்வநாதன் ஆகியோா் அங்கு சென்று, கிராம மக்கள் உதவியுடன் அதனைப் பிடித்துச் சென்று பல்லலகுப்பம் விரிவு காப்புக்காட்டில் விட்டனா்.