குடியாத்தத்தில் 72 மையங்களில் கரோனா தடுப்பூசி

குடியாத்தம் நகராட்சியில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த 72 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
குடியாத்தத்தில்  கரோனா  தடுப்பூசி  செலுத்தும்  முகாமை  தொடக்கி வைத்த  கோட்டாட்சியா்  சா.தனஞ்செயன்,  எம்எல்ஏ  அமலுவிஜயன்.
குடியாத்தத்தில்  கரோனா  தடுப்பூசி  செலுத்தும்  முகாமை  தொடக்கி வைத்த  கோட்டாட்சியா்  சா.தனஞ்செயன்,  எம்எல்ஏ  அமலுவிஜயன்.

குடியாத்தம் நகராட்சியில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த 72 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளிலும், வாா்டுக்கு 2 வீதம் 72 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி செலுத்தும் முகாமை கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், எம்எல்ஏ அமலுவிஜயன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பி.சிசில்தாமஸ், வட்டாட்சியா் ச.லலிதா, முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கள்ளூா் கே.ரவி, சுகாதார அலுவலா் பாண்டிசெந்தில்குமாா், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா் பிரபுதாஸ், கருப்புலீஸ்வரா் கோயில் முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் கே.வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com