புதுமணப் பெண் தற்கொலை

குடியாத்தம் அருகே திருமணமான 8 நாளில் மணப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
அன்பரசி.
அன்பரசி.

குடியாத்தம்: குடியாத்தம் அருகே திருமணமான 8 நாளில் மணப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

குடியாத்தம் செருவங்கி, பெரியாா் நகரைச் சோ்ந்த எழிலரசன் மகள் அன்பரசி (21). இவருக்கும் கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூரைச் சோ்ந்த ராமராஜனுக்கும்(32) கடந்த 8- ஆம் தேதி கே.வி.குப்பத்தில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றது.

ராமராஜன் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்கிறாா்.தாய் வீட்டில் இருந்த அன்பரசி, புதன்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலின்பேரில் நகர போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நகர காவல் ஆய்வாளா் லட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com