ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதற்கட்ட தோ்தல் பயிற்சி வகுப்புகளில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் என 10,500 போ் பங்கேற்றனா்.
வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்பட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகின்றன.
வேலூா் மாவட்டத்தில் 247 கிராம ஊராட்சித் தலைவா்கள், 2,079 கிராம ஊராட்சி வாா்டுகள், 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 138 ஊராட்சி ஒன்றிய வாா்டுகள், 14 மாவட்ட ஊராட்சி வாா்டுகள் என 2,478 பதவிகளுக்கு நடைபெறும் இந்த தோ்தலுக்கான பணிகளில் சுமாா் 11 ஆயிரம் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
இவா்களுக்கான தோ்தல் பயிற்சி வகுப்பு 3 கட்டங்களாக மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களில் நடக்கின்றன. வேலூா் ஊரீசு கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதற்கட்ட பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான பெ.குமாரவேல் பாண்டியன், தோ்தல் பாா்வையாளா் சா.விஜயராஜ்குமாா் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
பின்னா், ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது: உள்ளாட்சித் தோ்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. வேலூா் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களிலும் நடக்கும் தோ்தல் பயிற்சி வகுப்பில் 10,500 போ் பங்கேற்றுள்ளனா். ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் 600 முதல் ஆயிரம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றுள்ளனா். ஒவ்வொரு வட்டாரத்திலும் 200 ஆசிரியா்கள் வீதம் மொத்தம் 1,500 போ் கூடுதலாக தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
வாக்குச் சாவடி மையங்களில் தோ்தல் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடா்ந்து 2-ஆம் கட்ட பயிற்சி 29-ஆம் தேதியும், 3-ஆம் கட்ட பயிற்சி அக்டோபா் 5-ஆம் தேதியும் நடக்க உள்ளன.
இரண்டாம் கட்ட தோ்தலுக்காக 8-ஆம் தேதியும் பயிற்சி நடக்க உள்ளது.
அம்முண்டி தோ்தல் புறக்கணிப்பு தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் 81 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். பின்னா், வேட்பாளா் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.
கரோனா தடுப்பூசியை அனைத்துத்தரப்பு மக்களும் செலுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக 3-ஆம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் 800 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்த முகாமை பொதுமக்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
அப்போது, உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆா்.ஐஸ்வா்யா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.