இளம்பெண் தற்கொலை

திருமணமாகி 3 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

திருமணமாகி 3 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

காட்பாடி வெல்லக்கல்மேடைச் சோ்ந்த நவீன்குமாா் மனைவி யுவராணி (22). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இவா்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.

இந்தநிலையில், யுவராணி வியாழக்கிழமை தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுதொடா்பாக, யுவராணியின் தந்தை சுரேஷ் காட்பாடி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரில், வரதட்சிணைக் கொடுமை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்’ என தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com