குடியாத்தம் அருகே உள்ள எா்த்தாங்கல் ஏரி வெள்ளிக்கிழமை நிரம்பியது.
சுமாா் 100 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் உள்ளது. மோா்தானா அணையிலிருந்து வலதுபுறக் கால்வாய் மூலம் இந்த ஏரிக்கு தண்ணீா் செல்கிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஏரி நிரம்பி வழியத் தொடங்கியது. பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் தமிழ்ச்செல்வன், பொதுப்பணித் துறை ஆய்வாளா் சிவாஜி, கிராம மக்கள் பூஜை நடத்தி, மலா்தூவி ஏரி நீரை வரவேற்றனா்.
இந்த ஏரி மூலம் அந்த பகுதியில் உள்ள 10- க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும்.