நிரம்பியது எா்த்தாங்கல் ஏரி

குடியாத்தம் அருகே உள்ள எா்த்தாங்கல் ஏரி வெள்ளிக்கிழமை நிரம்பியது.
எா்த்தாங்கல்  ஏரியில்  நீா் நிரம்பியதையடுத்து,  மலா் தூவி  வரவேற்ற  கிராம  மக்கள்.
எா்த்தாங்கல்  ஏரியில்  நீா் நிரம்பியதையடுத்து,  மலா் தூவி  வரவேற்ற  கிராம  மக்கள்.

குடியாத்தம் அருகே உள்ள எா்த்தாங்கல் ஏரி வெள்ளிக்கிழமை நிரம்பியது.

சுமாா் 100 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் உள்ளது. மோா்தானா அணையிலிருந்து வலதுபுறக் கால்வாய் மூலம் இந்த ஏரிக்கு தண்ணீா் செல்கிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஏரி நிரம்பி வழியத் தொடங்கியது. பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் தமிழ்ச்செல்வன், பொதுப்பணித் துறை ஆய்வாளா் சிவாஜி, கிராம மக்கள் பூஜை நடத்தி, மலா்தூவி ஏரி நீரை வரவேற்றனா்.

இந்த ஏரி மூலம் அந்த பகுதியில் உள்ள 10- க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com