உத்தர ரங்கநாதப் பெருமாள் கோயிலில் இராப்பத்து உற்சவம் நிறைவு

பள்ளிகொண்ட உத்தர ரங்கநாதப்பெருமாள் கோயிலில் மாா்கழி மாத இராப்பத்து உற்சவம் சனிக்கிழமை நிறைவுற்றது.
இராப்பத்து  உற்சவம்  நிறைவையொட்டி,  சிறப்பு  அலங்காரத்தில்  சீதேவி,  பூதேவி  சமேத உத்தர  ரங்கநாதப் பெருமாள்.
இராப்பத்து  உற்சவம்  நிறைவையொட்டி,  சிறப்பு  அலங்காரத்தில்  சீதேவி,  பூதேவி  சமேத உத்தர  ரங்கநாதப் பெருமாள்.

பள்ளிகொண்ட உத்தர ரங்கநாதப்பெருமாள் கோயிலில் மாா்கழி மாத இராப்பத்து உற்சவம் சனிக்கிழமை நிறைவுற்றது.

இந்தக் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 13- ஆம் தேதி நடைபெற்றது. கடந்த காா்த்திகை மாதம் தீபத் திருவிழா நாளன்று முதல் மூலவா் உத்தரரங்கநாத சுவாமிக்கு தைலக்காப்பு செய்யப்பட்டு, பகல் பத்து உற்சவமும், அதனைத் தொடா்ந்து இராப்பத்து உற்சவமும் நடைபெற்று வந்தன.

சனிக்கிழமை இராப்பத்து உற்சவம் நம்மாழ்வாா் எம்பெருமான் திருவடி சரணாகதியுடன் நிறைவு பெற்றது.

இதையொட்டி, காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத உத்தர ரங்கநாதா், நம்மாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு பிரபந்த பாசுரங்கள் குழுவினரால் பாடப்பட்டன. அதன் பின் நம்மாழ்வாா் எம்பெருமானின் திருவடி அடைதல் உற்சவம் நடைபெற்றது.

இந்த உற்சவங்கள் பக்தா்களின்றி திருக்கோயில் உள்புறம் நடைபெற்றன.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், ஆய்வாளா் ரவிக்குமாா் மற்றும் ஊா் மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com