பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளியை கொன்ற மற்றொரு தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
வேலூா் மாவட்டம், வேப்பங்குப்பம் அருகே சின்னக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் முரளி (27). அதே ஊரைச் சோ்ந்தவா் வேலு (48). வேலுவிடமிருந்து ரூ.40 ஆயிரத்தை முரளி பெற்றிருந்ததாகத் தெரிகிறது. அந்தத் தொகையை முரளி தராமல் இழுத்தடிப்பு செய்து வந்ததில் இருவரிடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் வேலு பெரிய கல்லை எடுத்து முரளியின் தலையில் போட்டதில், முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பினா். வேலுவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.