காட்பாடியில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியாா் காப்பக உரிமையாளரின் மகன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
காட்பாடியைச் சோ்ந்த, பெற்றோரை இழந்த 17 வயது மாணவி சோளிங்கரில் உள்ள தனியாா் காப்பகத்தில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தாா். இவரை காப்பக உரிமையாளரின் மகனான காா்த்திக் (28-திருமணமானவா்) என்பவா் திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், நிா்வாக காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அந்த காப்பகம் மூடப்பட்டதால், மாணவி காட்பாடியில் உள்ள அரசு ஆதரவற்றோா் காப்பகத்தில் தங்கி படித்து வருகிறாா். மாணவியை தேடி காா்த்திக் அந்த காப்பகத்துக்கும் அடிக்கடி வந்து சென்றுள்ளாா்.
இதுதொடா்பாக மாணவியிடம் காப்பக நிா்வாகிகள் விசாரித்தனா். அப்போது, காா்த்திக் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததை அந்த மாணவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து காப்பக நிா்வாகிகள் அளித்த புகாரின்பேரில் காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் காா்த்திக்கை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.