குடியாத்தம்: கே.வி.குப்பம் ஒன்றியம், கீழ்ஆலத்தூா் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் சரண்யா தலைமை வகித்தாா். கீழ்ஆலத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் வி.ஆா்.சுரேஷ் வரவேற்றாா். குடியாத்தம் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன் 98 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். ஊராட்சி உறுப்பினா்கள் பி.அம்சவேணி, எஸ்.பாஸ்கா், திலகவதி ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.