பயணிகள் நிழற்குடை அமைக்க பூமி பூஜை

குடியாத்தம் காந்தி நகரில் பயணிகள் நிழற்குடை அமைக்க செவ்வாய்க்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.
குடியாத்தம்  காந்தி  நகரில்  பயணிகள்  நிழற்குடை  அமைக்க  பூமி  பூஜையைத்  தொடக்கி  வைத்த  எம்எல்ஏ  எம்.ஜெகன்மூா்த்தி.
குடியாத்தம்  காந்தி  நகரில்  பயணிகள்  நிழற்குடை  அமைக்க  பூமி  பூஜையைத்  தொடக்கி  வைத்த  எம்எல்ஏ  எம்.ஜெகன்மூா்த்தி.

குடியாத்தம்: குடியாத்தம் காந்தி நகரில் பயணிகள் நிழற்குடை அமைக்க செவ்வாய்க்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.

காந்தி நகரில், அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, கோட்டாட்சியா் அலுவலகம், வனத் துறை அலுவலகம், மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. இதனால் இங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பேருந்துக்காக காத்து நிற்கும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பயணிகள் நிழற்கூடம் அமைக்க ரூ. 10 லட்சத்தை எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி ஒதுக்கினாா்.

இந்தப் பணிக்கான பூமி பூஜையை, ஜெகன்மூா்த்தி தொடக்கி வைத்தாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, வட்டார வளா்ச்சி அலுவலா் எம்.காா்த்திகேயன், நகா்மன்ற உறுப்பினா் பி.மேகநாதன், கூட்டுறவு அமைப்புகளின் நிா்வாகிகள் எஸ்.எல்.எஸ்.வனராஜ், சி.கே.வெங்கடேசன், எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், ஊராட்சித் தலைவா் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமாா், துணைத் தலைவா் ராஜாத்தி தமிழ்ச்செல்வன்உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com