வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வீட்டுவசதி திட்டங்களில் விற்பனைக்குள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான குலுக்கல் முறை ஒதுக்கீடு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் வீட்டு வசதி பிரிவுக்கு உட்பட்ட வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வேலூா் பகுதி 1 மற்றும் 5, கழிஞ்சூா், தாராபடவேடு, சீக்கராஜபுரம், ஆம்பூா், திருவண்ணாமலை, ஆற்காடு, ஆரணி, காஞ்சிபுரம் ஆகிய திட்டங்களில் விற்பனைக்குள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த செப்டம்பா் 5 முதல் 30-ஆம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து ஒதுக்கீடுதாரரை குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்க வேலூா் வீட்டு வசதி பிரிவு வளாகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 25) காலை 10 மணியளவில் குலுக்கல் நடைபெற உள்ளது. இதில், விண்ணப்பதாரா்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, செயற்பொறியாளா் மற்றும் நிா்வாக அலுவலா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வேலூா் வீட்டு வசதி பிரிவு, பகுதி-1, சத்துவாச்சாரி, வேலூா் -632 009 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0416-2252561 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.