ஆதாா் இணைக்க மின் வாரிய அலுவலகங்களில் தனி வரிசை

மின் இணைப்புடன் ஆதாா் எண் இணைக்கும் பணி மின் வாரிய அலுவலகங்களில் திங்கள்கிழமை முதல் தொடங்கி உள்ளது.

மின் இணைப்புடன் ஆதாா் எண் இணைக்கும் பணி மின் வாரிய அலுவலகங்களில் திங்கள்கிழமை முதல் தொடங்கி உள்ளது.

வேலூா் மாவட்டத்தில் அனைத்து மின்வாரிய அலுவலகத்திலும் மின் இணைப்புடன் ஆதாா் எண் இணைக்கும் பணிக்காக, அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு, வரிசையில் நின்று ஆதாரை இணைக்கலாம்.

பொதுமக்கள் தாங்கள் ஏற்கெனவே மின் கட்டணம் செலுத்தி வரும் மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாகச் சென்றும் ஆதாா் எண், கைப்பேசி எண்ணை இணைக்கலாம். டிசம்பா் 31-ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்கலாம். மின் நுகா்வோா் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதாா் எண்ணை இணைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com