பெண் கைதி திடீா் உயிரிழப்பு

வேலூா் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி மனநலம் பாதிக்கப்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென உயிரிழந்தாா்.

வேலூா் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி மனநலம் பாதிக்கப்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், தூசியைச் சோ்ந்தவா் சுமதி (40). இவா், கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, வேலூா் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, சென்னை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா்.

அங்கு, சுமதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com