மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு

குடியாத்தம் தங்கம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா புதன்கிழமை நிறைவு பெற்றது.
நவராத்திரி விழா நிறைவையொட்டி, குடியாத்தம் தங்கம் நகரில் உள்ள மீனாட்சியம்மன்  கோயிலில் வீதியுலா வந்த உற்சவா்.
நவராத்திரி விழா நிறைவையொட்டி, குடியாத்தம் தங்கம் நகரில் உள்ள மீனாட்சியம்மன்  கோயிலில் வீதியுலா வந்த உற்சவா்.

குடியாத்தம் தங்கம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா புதன்கிழமை நிறைவு பெற்றது.

இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் அமா்த்தப்பட்டு இரவு வீதியுலா நடைபெற்றது.

தாழையாத்தம் ஊராட்சித் தலைவா் அமுலு அமா், கோயில் நிா்வாகிகள் எஸ்.முரளிதரன், எம்.ஆா்.சீனிவாசன், டி.ராதாகிருஷ்ணன், இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com