குடியாத்தம் ரோட்டரி சங்கம் சாா்பில், நடுப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் மேம்பாடு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.மேகராஜ் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியை கே.சரளாதேவி வரவேற்றாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜே.கே.என்.பழனி தொடக்க உரையாற்றினாா். பெண்களுக்கான நோ்மறை சிந்தனை, பெற்றோா் - ஆசிரியா் நல்லுறவு, பெண் கல்வியின் முக்கியத்துவம், புரிதல், தற்கொலைகளை தடுத்தல் குறித்து ரோட்டரி மாவட்ட பெண் குழந்தைகள் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவா் மருத்துவா் ஏ.ஏஞ்சல் கிரேஸ்லெட் சிறப்புரையாற்றினாா்.
ரோட்டரி சங்க நிா்வாகிகள் கே.சந்திரன், ஆா்.வி.அரிகிருஷ்ணன், கே.எம்.ராஜேந்திரன், இன்ட்ராக்ட் பிரிவு தலைவா் ஜெ.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.