பேருந்து மோதி காயமடைந்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் ஜீவா நகரைச் சோ்ந்த முனியப்பன் மகன் சுரேஷ் (11). இவா், அங்குள்ள தனியாா் பள்ளியில் 6- ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த புதன்கிழமை சுரேஷ் மிதிவண்டியில் பள்ளிக்குச் சென்றாா். செதுக்கரை அருகே சென்றபோது, வேலூரிலிருந்து குடியாத்தம் வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த சுரேஷ், வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவா் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com