திருமணி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 182 பயனாளிகளுக்கு ரூ.4.25 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருமணி, ஒழையாத்தூா், விழுந்தாக்கல் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து திருமணியில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்வில் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், கே.வி.குப்பம் ஒன்றியக் குழுத் தலைவா் எல்.ரவிச்சந்திரன், மாவட்ட தொழில் மைய மேலாளா் வித்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பேபி இந்திரா, வேளாண் இணை இயக்குநா் மகேந்திர பிரதாப் தீட்சித், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் புண்ணியகோட்டி, வட்டாட்சியா் சரண்யா, ஒன்றியக்குழு உறுப்பினா் கே.சீதாராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.