குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.விமல்குமாா் தலைமையில் மருத்துவா் குழு 250- க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சை அளித்தனா்.
துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி, நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, நகா்மன்ற உறுப்பினா்கள் என்.கோவிந்தராஜ், அா்ச்சனா நவீன், தண்டபாணி, எம்.எஸ்.குகன், நகராட்சி சுகாதாரக் களப்பணியாளா் பிரபுதாஸ், ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன், எம்.எஸ்.அமா்நாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.