குடியாத்தத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில், குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
குடியாத்தத்தில்  நெல்  கொள்முதல்  நிலையத்தை  தொடக்கி  வைத்த  எம்எல்ஏ  அமலுவிஜயன்.
குடியாத்தத்தில்  நெல்  கொள்முதல்  நிலையத்தை  தொடக்கி  வைத்த  எம்எல்ஏ  அமலுவிஜயன்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில், குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, குடியாத்தத்தில் முதல் முறையாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு, வேலூா் மாவட்ட நெல் கொள்முதல் நிலைய அலுவலா் எஸ்.காமராஜ் தலைமை வகித்தாா். குடியாத்தம் நிலைய பட்டியல் எழுத்தா் ஜி.வடிவேல் வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன், நிலையத்தை தொடக்கி வைத்தாா். நகா்மன்ற உறுப்பினா் என்.கோவிந்தராஜ், முன்னாள் ஒன்றிய திமுக செயலாளா் கள்ளூா் கே.ரவி, தட்டப்பாறை ஊராட்சி முன்னாள் தலைவா் ஏகாம்பரம், முன்னோடி விவசாயிகள்

கெளராப்பேட்டை எஸ்.உதயகுமாா், கிருஷ்ணம்பல்லி ஜி.ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கிராம நிா்வாக அலுவலரிடம் சான்று பெற்று, இணையதளத்தில் பதிவு செய்யும் விவசாயிகளிடம், இந்த நிலையத்தில் தலா 2,400 கிலோ நெல் கொள்முதல் செய்யப்படும்.

இங்கு சன்ன ரக நெல் கிலோ ரூ. 20.60, சாதா ரக நெல் கிலோ ரூ. 20.15- க்கு கொள்முதல் செய்யப்படும் என நிலைய அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com