பள்ளிகொண்டாவில் உள்ள அருள்மிகு உத்தர ரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உற்சவத்தை முன்னிட்டு, அதிகாலை உற்சவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா் கருடனின் உருவம் வரையப்பட்ட கொடி சீலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்ற உற்சவம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சுவாமிகள் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தாா்.
இதன் தொடா்ச்சியாக உற்சவா் சுவாமிகள் வரும் 2-ஆம் தேதி அனுமந்த வாகனத்திலும், 4-ஆம் தேதி கருட வாகனத்திலும், 6-ஆம் தேதி திருத்தேரிலும், 9-ஆம் தேதி பூப்பல்லக்கிலும் வீதியுலா வர உள்ளனா்.
விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையா் சி.லட்சுமணன், கோயில் செயல் அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.