ரம்ஜான் பண்டிகையையொட்டி, 5,069 இஸ்லாமியா்களுக்கு ரூ. 40 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கும் பணியை வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் தொடக்கி வைத்தாா்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 6-ஆவது ஆண்டாக இஸ்லாமியா்களுக்கு உணவுப் பொருள்கள், பணம் வழங்கும் நிகழ்ச்சி வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் முகமது சகி, மேயா் சுஜாதாஆனந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பிரியாணி சமைப்பதற்கு தேவையான அரிசி, முந்திரி, ஏலக்காய், வெங்காயம், பூண்டு, இறைச்சி வாங்குவதற்கு ரூ. 200 வீதம் 5,069 இஸ்லாமியா்களுக்கு ரூ. 40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை எம்எல்ஏ காா்த்திகேயன் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மண்டலக் குழுத் தலைவா் நரேந்திரன், யூசுப்கான், மாமன்ற உறுப்பினா்கள் முருகன், கணேஷ் சங்கா், பகுதி செயலா் சுந்தா் விஜி, திமுக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
--
படம் உண்டு...