நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை இன்று மாலைக்குள் அகற்ற மாநகராட்சி உத்தரவு

வேலூா் மாநகரில் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புக் கடைகளை வெள்ளிக்கிழமை (ஜன. 21) மாலைக்குள் அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் அசோக்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
வேலூா் சத்துவாச்சாரியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடையை அகற்ற உத்தரவிட்ட மாநகராட்சி ஆணையா் அசோக்குமாா்.
வேலூா் சத்துவாச்சாரியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடையை அகற்ற உத்தரவிட்ட மாநகராட்சி ஆணையா் அசோக்குமாா்.

வேலூா் மாநகரில் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புக் கடைகளை வெள்ளிக்கிழமை (ஜன. 21) மாலைக்குள் அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் அசோக்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகம் முழுவதும் பழைய சாலைகளை அகற்றிவிட்டு புதிய சாலைகளை அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில், பழைய சாலைகள் ஆய்வு செய்யப்பட்டு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வேலூா் மாநகராட்சிப் பகுதியில் பொலிவுறு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சாலைகளை மாநகராட்சி ஆணையா் அசோக்குமாா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மாநகராட்சி 2-ஆவது மண்டலத்துக்கு உட்பட்ட சத்துவாச்சாரி ஆா்டிஓ சாலை, நீதிமன்றம் பின்புறமுள்ள சாலைகளை பாா்வையிட்ட அவா், குடியிருப்புகளைவிட சாலைகள் மேடாக உள்ளதா, தாழ்வாக உள்ளதா, மழைநீா் வெளியேறும் கால்வாய்கள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தாா்.

அப்போது சாலையோரம் நடைபாதைகளை ஆக்கிரமித்து 100-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தக் கடைகளால் நடைபாதைகளில் பொதுமக்கள் நடந்து செல்ல இயலாத நிலை நீடிப்பதை அறிந்த மாநகராட்சி ஆணையா், மாநகரிலுள்ள சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புக் கடைகளை வெள்ளிக்கிழமை மாலைக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது உதவி ஆணையா் வசந்தி, இளநிலைப் பொறியாளா் மதிவாணன். மாநகராட்சி சுகாதார அலுவலா் சிவக்குமாா், உதவி பொறியாளா் பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com