அணைக்கட்டு வட்டார அளவில் நடந்த சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், வேலூா் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
கட்டுரைப் போட்டியில் வசந்தநடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி மகாலட்சுமி முதல் பரிசையும், பேச்சுப் போட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா் மருதவள்ளிபாளையத்தைச் சோ்ந்த சந்தோஷ் முதல் பரிசையும், ஓவியப் போட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி ராமாபுரத்தைச் சோ்ந்த சுவேதா முதல் பரிசையும் பெற்றனா்.
வெற்றி பெற்றவா்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் ராசேந்திரன், தமிழ்ச்செல்வி, வேணுகோபால், வட்டார வள மேற்பாா்வையாளா் சாந்தி ஆகியோா் சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகளை வழங்கினா்.
முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனா். போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.