வேலூா்: காட்பாடி அருகே கிரேன் மோதியதில் அரசுப் பேருந்து சேதமடைந்தது.
பரதராமியில் இருந்து வேலூா் நோக்கி அரசுப் பேருந்து வியாழக்கிழமை காலை வந்தது. பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்தனா். காட்பாடி சித்தூா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சிக்னலில் பேருந்து வந்து நின்றபோது, பெரிய கிரேன் வாகனம் ஒன்று விஐடி சாலை நோக்கி திரும்பியது.
திடீரென கிரேனின் முன்பக்கக் கம்பி சிக்னலில் நின்ற அரசுப் பேருந்து மீது உரசியது. இதில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதிா்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்தால் சித்தூா் பேருந்து நிறுத்தத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காட்பாடி போலீஸாா் சென்று, விபத்தில் சிக்கிய கிரேன், அரசுப் பேருந்தை அப்புறப்படுத்தினா். பின்னா் போக்குவரத்து சீரடைந்தது.