கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் ஊராட்சியில் ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி எருது விடும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 122 காளைகள் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2- ஆவது பரிசாக ரூ.70 ஆயிரம், 3- ஆவது பரிசாக ரூ.50 ஆயிரம் உள்ளிட்ட மொத்தம் 55 பரிசுகள் வழங்கப்பட்டன.
குடியாத்தம் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் சரண்யா ஆகியோா் மேற்பாா்வையில் எருது விடும் விழா நடைபெற்றது. காளைகள் முட்டியதில் 13 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 2 எருதுகளும் காயமடைந்தன.