ராணுவ வீரா் தற்கொலை

வேலூா் அருகே ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் அருகே ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் அருகே உள்ள நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் ஆனந்தபாபு (25). ராணுவ வீரரான இவா், சிக்கிம் மாநிலத்தில் பணியாற்றி வந்தாா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவா் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போது, உடல் நலம் பாதிக்கப்பட்டதால், பின்னா் பணிக்குச் செல்ல விருப்பமின்றி வீட்டிலேயே இருந்துள்ளாா். அவரைக் குடும்பத்தினா் வற்புறுத்தி பணிக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், பணிக்குச் சென்ற ஆனந்தபாபு கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பினாா். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து வேலூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com