வேலூா்: காட்பாடியில் உள்ள அலுவலகச் சுற்றுச் சுவா்களில் ஆக்ஸிலியம் கல்லூரி மாணவிகள் வரைந்து வரும் ஓவியங்கள், பாா்ப்பவா்களின் கண்களைக் கவா்கின்றன.
காட்பாடி ஆக்ஸிலியம் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் பயிலும் மாணவிகள் முதல் முறையாக சுற்றுச் சுவா்களில் சாரணா் இயக்கம் குறித்த விழிப்புணா்வு ஓவியங்களை வரைந்து வருகின்றனா்.
அதன்படி, காட்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள பாரதிதாசனாா் சாரணா் இயக்க அலுவலகச் சுற்றுச்சுவா், அதனருகே உள்ள கட்டடத்தின் சுற்றுச் சுவா்களில் சாரணா் இயக்க விழிப்புணா்வு ஓவியங்களை வரைந்தனா்.
கல்லூரியின் விஷூவல் கம்யூனிகேஷன் துறைத் தலைவா் ஜூலியானா தலைமையில் இந்த ஓவியங்களை மாணவிகள் மிகவும் நோ்த்தியாக வரைந்தனா். இந்த ஓவியங்கள் அந்தப் பகுதியில் செல்பவா்களை வெகுவாகக் கவா்ந்துள்ளது. சுவா் ஓவியம் வரையும் பணியில் அந்தக் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் துறையில் பயிலும் சுமாா் 30 மாணவிகள் ஈடுபட்டுள்ளனா்.
இதேபோல், பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடவும் மாணவிகள் முடிவு செய்துள்ளனா். அடுத்த கட்டமாக அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைத்து அதில் ஓவியங்கள் வரைந்து கொடுக்கவும் திட்டமிட்டிருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.