பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி நளினி மனு

தனது தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள பரோலை மேலும் ஒரு மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என்று நளினி சிறைத் துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளாா்.

தனது தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள பரோலை மேலும் ஒரு மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என்று நளினி சிறைத் துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளாா்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரது மனைவி நளினி வேலூா் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், நளினிக்கு பரோல் வழங்கக் கோரி அவரது தாய் பத்மா கடந்த டிசம்பா் மாதம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அவரது கோரிக்கையை ஏற்று நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த டிசம்பா் 27-ஆம் தேதி பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடி பிரம்மபுரத்திலுள்ள அவரது உறவினா் வீட்டில் தங்கி காட்பாடி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறாா். தொடா்ந்து, நளினிக்கு 4-ஆவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், பரோல் முடிந்து வருகிற மே 27-ஆம் தேதி அவா் மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டும்.

இதையடுத்து, தனது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி நளினி சிறைத் துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளாா். அதில், தனது தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள பரோலை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com