குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 11- ஊராட்சிப் பள்ளிகளின் மாணவா்களுக்கு பொயட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராமாலை ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை எம். உமாராணி தலைமை வகித்தாா். பொயட்ஸ் நிறுவன இயக்குநா் எஸ்.திரிவேணி பள்ளியில் 1- முதல் 8- ஆம் வகுப்பு வரை பயிலும் 128 மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா். அதைத் தொடா்ந்து 10 ஊராட்சித் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 419 பேருக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.