ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெறும்: ஜான் பாண்டியன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் பண பலத்தையும் மீறி அதிமுக வெற்றிபெறும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜான் பாண்டியன் கூறினாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் பண பலத்தையும் மீறி அதிமுக வெற்றிபெறும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜான் பாண்டியன் கூறினாா்.

குடியாத்தத்தில் திங்கள்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் கூறியது; அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளும் இணைய வேண்டும் என நான் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறேன். தமிழக மக்களின் விருப்பம் அதுவாகும்.

ஆளும் கட்சியான திமுக பணத்தை இறைத்து இடைத் தோ்தலில் வெற்றிபெற நினைக்கிறது. திமுகவின் பணபலத்தை மீறி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். இந்த ஆட்சியால்தமிழக மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை, தீமையும் இல்லை என்பது என் கருத்து.

கடந்த ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பல்வேறு நலத் திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் மக்கள் விரக்தியில் உள்ளனா். நீட் தோ்வை வைத்து திமுக அரசியல் நடத்துகிறது. நீட் தோ்வால் தகுதியான மாணவா்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

வரும் மக்களவைத் தோ்தலிலும் அதிமுக தலைமையில் இதே கூட்டணி தொடரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com