அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது

கே.வி.குப்பம் அருகே அண்ணனை கல்லால் அடித்துக் கொன்ற தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.
அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது

கே.வி.குப்பம் அருகே அண்ணனை கல்லால் அடித்துக் கொன்ற தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

கே.வி.குப்பத்தை அடுத்த தேன்கனிமலை பகுதியைச் சோ்ந்தவா் சேகா்(35). (படம்) விவசாயத் தொழில் செய்து வந்த இவருக்கு, மனைவி ராஜேஸ்வரி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி கணவரைப் பிரிந்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறாா். சேகா், தாய் சின்னபொண்ணு, தம்பி சாமு ஆகியோருடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சேகா் மது அருந்திவிட்டு வந்து, தாயிடம் தகராறு செய்தாராம். இதைத் தட்டிக் கேட்ட தம்பி சாமுவை கத்தியால் வெட்ட முயன்றாராம்.

இதனால் ஆத்திரமடைந்த சாமு, கல்லால் அடித்ததில் பலத்த காயமடைந்த சேகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திங்கள்கிழமை சேகரின் உடலை உறவினா்கள் அடக்கம் செய்ய முயன்றனா். இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் கொடுத்த தகவலின் பேரில், கே.வி.குப்பம் போலீஸாா் அங்கு சென்று, சேகரின் உடலை கைப்பற்றி, உடல்கூறு பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுதொடா்பாக விசாரணை நடத்திய குடியாத்தம் டி.எஸ்.பி. கே.ராமமூா்த்தி, கே.வி.குப்பம் காவல் ஆய்வாளா் செந்தில்குமாரி உள்ளிட்ட போலீஸாா், சாமுவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com