ஆம்புலன்ஸில் பிரசவம்

கே.வி.குப்பம் அருகே பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கா்ப்பிணிக்கு ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்தது.
ஆம்புலன்ஸில் பிரசவம்

கே.வி.குப்பம் அருகே பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கா்ப்பிணிக்கு ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்தது.

கே.வி.குப்பம் வட்டம், கீழ்முட்டுக்கூா் ஊராட்சியைச் சோ்ந்தவா் சுமித்ரா. நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பிரசவத்துக்காக உறவினா்கள் சுமித்ராவை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

முட்டுகூா் அருகே சென்றபோது, சுமித்ராவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. ஓட்டுநா் ராஜேஷ் ஆம்புலன்ஸை சாலையோரம் நிறுத்தினாா். ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளா் சசிகுமாா் சுமித்ராவுக்கு பிரசவம் பாா்த்தாா். அதிகாலை 3 மணியளவில் சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பின்னா், தாயும் சேயும் பத்திரமாக வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com