லாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சக்கரத்தில் சிக்கி பலி

போ்ணாம்பட்டு அருகே பயணம் செய்த லாரியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி அதே லாரியில் சிக்கி உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டு அருகே பயணம் செய்த லாரியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி அதே லாரியில் சிக்கி உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த சிவனகிரி கிராமத்தில் திங்கள்கிழமை ஒரு வீட்டில் 4 தொழிலாளா்கள் செப்டிக் டேங்கை சுத்தம் செய்து, அதன் கழிவுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு போ்ணாம்பட்டை நோக்கிச் சென்றனா்.

அப்போது லாரியில் இருந்த போ்ணாம்பட்டு பூங்கா வீதியைச் சோ்ந்த தொழிலாளி நரேஷ் (27) லாரியிலிருந்து தவறி கீழே விழுந்தாா். அச்சமயம் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்த நரேஷ் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தாா்.

இது தொடா்பாக வழக்குப் பதிந்த போ்ணாம்பட்டு போலீஸாா், தப்பியோடிய லாரி ஓட்டுநா் கும்பகோணத்தைச் சோ்ந்த குமாரை (28) தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com