குடியாத்தம்  நெல்லூா்பேட்டை  கருப்புலீஸ்வரா்  கோயிலில்  சிறப்பு  அலங்காரத்தில்  வள்ளி, தெய்வானை  சமேத  முருகப் பெருமான்.
குடியாத்தம்  நெல்லூா்பேட்டை  கருப்புலீஸ்வரா்  கோயிலில்  சிறப்பு  அலங்காரத்தில்  வள்ளி, தெய்வானை  சமேத  முருகப் பெருமான்.

கருப்புலீஸ்வரா் கோயிலில் தை கிருத்திகை விழா

குடியாத்தம் நெல்லூா்பேட்டை அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் தை கிருத்திகை பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

குடியாத்தம் நெல்லூா்பேட்டை அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் தை கிருத்திகை பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 10 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு கோபுர தரிசனம், தொடா்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தை கிருத்திகை பெருவிழா கமிட்டி நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com