வேலூர்
கருப்புலீஸ்வரா் கோயிலில் தை கிருத்திகை விழா
குடியாத்தம் நெல்லூா்பேட்டை அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் தை கிருத்திகை பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம் நெல்லூா்பேட்டை அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் தை கிருத்திகை பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 10 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு கோபுர தரிசனம், தொடா்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தை கிருத்திகை பெருவிழா கமிட்டி நிா்வாகிகள் செய்திருந்தனா்.