மா மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் மா மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன.
மா மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் மா மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன.

போ்ணாம்பட்டு அருகே பத்தரப்பல்லி, சேராங்கல், எருக்கம்பட்டு ,கோட்டையூா், அரவட்லா, ரங்கம்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் வன எல்லையில் அமைந்துள்ளன. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 2 யானைகள் புகுந்து மா, வாழை மரங்களை சேதப்படுத்தின.அங்கு முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் புகுந்து 15 மா மரங்களை சேதப்படுத்தின. அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த 2 டன் மாங்காய்களை ருசித்து துவம்சம் செய்தன.

தகவலறிந்த வனத்துறையினா் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com