வெடி விபத்தில் காயமடைந்தமுதியவா் உயிரிழப்பு

இறுதி ஊா்வலத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

இறுதி ஊா்வலத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

ஒடுகத்தூரை அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஜானகி என்பவா் கடந்த 14-ஆம் தேதி காலமானாா். அவரின் இறுதி ஊா்வலத்தில் பட்டாசு வெடித்தபோது, பெரிய சாக்கு பையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீப்பொறி விழுந்தது. அப்போது அங்கு நின்றிருந்த முனுசாமி (60), சிவாஜி (60) மீது அவை வெடித்துச் சிதறின. இதில், இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இருவரும் வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த நிலையில் முனுசாமி வியாழக்கிழமை உயிரிழந்தாா். வேப்பங்குப்பம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com