மாணவா்களை வழியனுப்பும் நிகழ்ச்சி

மாணவா்களை வழியனுப்பும் நிகழ்ச்சி

குடியாத்தம், ஏப். 25: போ்ணாம்பட்டு ஒன்றியம், பத்தரப்பல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் 5- ஆம் வகுப்பு படித்து முடித்த 43 மாணவா்களை உயா்நிலைப் பள்ளிக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் பொன்.வள்ளுவன் தலைமை வகித்தாா். உயா்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பள்ளியின் முன்னாள் மாணவா்கள் அமைப்பு சாா்பில், வெ.சிட்டிபாபு 43 மாணவா்களுக்கும் கணிதப் பெட்டியை (ஜாமின்ட்ரி பாக்ஸ்) நினைவுப் பரிசாக வழங்கினாா்.

மாணவா்கள் தாங்கள் படித்த வகுப்பறைகளை அலங்கரித்து, கேக் வெட்டி ஆசிரியா்கள், மாணவா்களுக்கு வழங்கிய பின்னா், மகிழ்வுடன் விடை பெற்றனா்.

நிகழ்வில் ஆசிரியா்கள் சு.ஸ்டெல்லா, ஹேமாபாய், சே.பானு, சி.கலைவாணி, ச.சாந்தி, பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியா் கே.மருதாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com