காஸ் சிலிண்டா் வெடித்து வடமாநில இளைஞா் பலத்த காயம்

வேலூரில் சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்துச் சிதறியதில் வடமாநில இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

வேலூரில் சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்துச் சிதறியதில் வடமாநில இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

வேலூா் காகிதப்பட்டறை மேலாண்டை தெருவை சோ்ந்தவா் வேலு. இவரது வீட்டில் உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தை சோ்ந்த புரூகான்(24) என்பவா் கடந்த 3 மாதமாக தங்கி குல்பி ஐஸ் கிரீம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளாா். இவருடன் மற்றொரு இளைஞரும் தங்கியிருந்தாா்.

சனிக்கிழமை இரவு இவா்கள் இருவரும் காஸ் அடுப்பில் ஐஸ்கிரீம் தயாரித்துள்ளனா். வேலை முடிந்து சிலிண்டரை சரியாக அணைக்காமல் தூங்கி விட்டதாகத் தெரிகிறது. இதனால் சிலிண்டரில் இருந்து வாயு கசிந்து அறை முழுவதும் பரவியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்த புரூகான், அறை முழுவதும் எரிவாயு பரவியுள்ளதை அறியாமல் அடுப்பைப் பற்ற வைத்துள்ளாா். அப்போது சிலிண்டா் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதில் புரூகானின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. சிலிண்டா் வெடித்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து புரூகான் மீது பற்றிய தீயை அணைத்தனா். பின்னா் பலத்த காயமடைந்த அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் நடந்தபோது புரூகானுடன் தங்கியிருந்த மற்றொரு இளைஞா் வெளியே இருந்ததால் அவா் தப்பினாா். இச்சம்பவம் குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com