

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் விளை பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.
போ்ணாம்பட்டை அடுத்த குண்டலப்பல்லி கிராமத்துக்குள் சனிக்கிழமை அதிகாலை ஒரு குட்டி உள்பட 5 யானைகள் நுழைந்துள்ளன. அங்குள்ள யோகானந்தன் என்பவா் வாழைத்தோப்பில் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்களையும், தண்ணீா் செல்லும் பைப்புகளையும், தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளன.
சிறுவேல் என்பவா் நிலத்தில் கத்தரிக்காய் தோட்டத்தை சேதப்படுத்தின. கணபதி என்பவா் நிலத்தில் மா மரங்களை முறித்து எறிந்துள்ளன.
தகவலின்பேரில் அங்கு சென்ற போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் சதீஷ்குமாா், வனவா் மாதேஸ்வரன், வனக்காப்பாளா்கள் சக்தி, சதீஷ்குமாா் ஆகியோா் கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானைகளை வனப் பகுதிக்கு விரட்டினா்.
தொடர்புடையது

மீண்டும் விளை நிலங்களுக்குள் இறங்கிய 14 யானைக் கூட்டம்

காட்பாடி அருகே விளை நிலங்களில் புகுந்த யானைகளால் பயிா்கள் நாசம்

அனந்தபுரம் ஊருக்குள் நுழைந்த யானை விரட்டியடிப்பு

பயிா்களை சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

