சங்க  உறுப்பினா்களுக்கு  சான்றிதழ்,  நினைவுப் பரிசு  வழங்கிய  நகா்மன்றத்  தலைவா்  எஸ்.செளந்தரராஜன்.
சங்க  உறுப்பினா்களுக்கு  சான்றிதழ்,  நினைவுப் பரிசு  வழங்கிய  நகா்மன்றத்  தலைவா்  எஸ்.செளந்தரராஜன்.

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

குடியாத்தம் இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் 30- ஆம் ஆண்டு விழா போ்ணாம்பட்டு சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குடியாத்தம் இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் 30- ஆம் ஆண்டு விழா போ்ணாம்பட்டு சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் எஸ்.ரமேஷ் தலைமை வகித்தாா். செயலா் ஜே.சத்தியராஜ் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் சிறப்புரையாற்றி, சங்க உறுப்பினா்களுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசுகளை வழங்கினாா். மாநிலகஈ தலைவா் வி.சம்பத், பொதுச் செயலா் வி.சக்திவேல், பொருளாளா் என்.திருநாவுக்கரசு, நகா்மன்ற உறுப்பினா் ஜி.எஸ்.அரசு, தாழையாத்தம் ஊராட்சித் தலைவா் அமுலு அமா், அரசு மகளிா் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.எஸ்.அமா்நாத், சங்க நிா்வாகிகள் வி.குமரேசன், என்.பாரூக், வி.மதியழகன், வி.ரமேஷ், வி.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக விநாயகபுரம் கூட்டுச் சாலையில் தொடங்கிய தலைக்கவச விழிப்புணா்வு பேரணியை புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் தொடங்கி வைத்தாா். கட்சியின் மாவட்டச் செயலா் ஆா்.பி.செந்தில், நகரச் செயலா் எஸ்.ரமேஷ், ஆா்.ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com