வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் மண்டல அலுவலா்களுக்கான தனியாா் வாடகை காா்களுக்கு ஸ்டிக்கா் ஓட்டும் பணி ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தோ்தல் ஆணைய அதிகாரிகள் செய்து வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 374 வாக்குச் சாவடிகள் 29 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனியாக மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 29 மண்டல அலுவலா்களுக்கும் தனித்தனியாக தனியாா் வாடகை காா்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது வாடகை வாகனங்களில் பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி மண்டலம் எண் வாரியாக ஸ்டிக்கா் ஒட்டும் பணி ஞாயிற்றுக்கிழமை சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
திங்கள்கிழமை காலை முதல் மண்டல அலுவலா்களிடம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருள்கள் ஒப்படைக்கப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கும் பணி நடைபெறும் என பவானிசாகா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் உமாசங்கா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


