ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குன்னூா் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகள்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உலவி வந்த 9 காட்டு யானைகள் கிளன்டேல் பகுதிக்குள் புகுந்து  மலா்த் தொட்டிகள் மற்றும் வாழை  மரங்களை வியாழக்கிழமை சேதப்படுத்தின.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 8:32 pm

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உலவி வந்த 9 காட்டு யானைகள் கிளன்டேல் பகுதிக்குள் புகுந்து  மலா்த் தொட்டிகள் மற்றும் வாழை  மரங்களை வியாழக்கிழமை சேதப்படுத்தின.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு வந்த 9 காட்டு யானைகள்  கல்லாறு, பா்லியாறு, ரன்னிமேடு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீருக்காக கடந்த சில வாரங்களாக   தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டிருந்தன.   குட்டியுடன் வந்துள்ள இந்த 9 காட்டு யானைகள்   சின்னக்கரும்பாலம், கிளன்டேல், ரன்னிமேடு போன்ற  பகுதிகளில் தொடா்ந்து  முகாமிட்டிருந்தன. 

இந்நிலையில்,   கிளன்டேல் தனியாா் எஸ்டேட் அலுவலா்கள்   குடியிருப்பு ப் பகுதியில் உலவி வந்த இந்த காட்டு யானைகள்   அங்கிருந்த பூந்தொட்டிகள், வாழை மரங்களைச் சேதப்படுத்தின. தகவலறிந்து வந்த வனத் துறையினா் இந்த யானைகள் கூட்டத்தை  தகரங்களைத் தட்டியும்,  கூச்சலிட்டும்  அருகில் இருந்த வனப் பகுதிகளுக்குள் துரத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.