ஊத்தங்கரையில் பாஜகவின் எஸ்.சி அணி சார்பில் மத்திய அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக ஒன்றியத் தலைவர் எஸ். சத்தியமூர்த்தி வரவேற்றார். கூட்டத்துக்கு எஸ்.சி. அணி மாவட்டத் தலைவர் இரா. சிவக்குமார் தலைமை வகித்தார். எஸ்.சி அணி மாநிலச் செயற்குழு உறுப்பினர் நாகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாக்கியா, கண்ணையன், கோபால் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலப் பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், மாநிலத் தலைவர் ம.வெங்கடேசன், மாநில துணை தலைவர் க.சாமிகண்ணு, பிரசார பிரிவு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஜெயராமன் ஆகியோர் பங்கேற்று பாஜக மக்களுக்கு செய்து வரும் பல்வேறு சாதனைகள் பற்றி பேசினர்.
ஊத்தங்கரை மேக் இன்டேன் கேஸ், பாஜக சார்பில் 50 ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டன. இறுதியாக நகரத் தலைவர் எஸ். சீனிவாசன் நன்றி கூறினார்.